Total Pageviews

Thursday, June 9, 2011

Missing u...



The morning comes and whispers by.

The noon sets its veil on the sky

I think of you every day and night,

Even though we are not together.

I long to be with you.

Now and forever.

Missing you
!

Unnodu kazhitha ovvuru manithuzhium..




உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...

-Vairamuthu..

காதலித்து பார்!


 

காதலித்து பார்!   உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்...
 உலகம் அர்த்தப்படும்... 
ராத்திரியின் நீளம் விளங்கும்....   
உனக்கும் கவிதை வரும்...
 கையெழுத்து அழகாகும்..... 
தபால்காரன் தெய்வமாவான்...   
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்... 
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்...  
காதலித்துப்பார் !  
 ***   தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்... 
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்... 
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்... 
காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால்... 
இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்... 
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... 
இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம் 
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் 
காதலித்துப் பார்!   
***   இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்... 
நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்... 
உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே அம்புவிடும்... 
காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... 
ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும் உதடுகள் மட்டும் சகாராவாகும்... 
தாகங்கள் சமுத்திரமாகும்... 
பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்... 
காதலித்துப் பார்!   
***   சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே... 
அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே... 
அதற்காகவேனும்... 
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் 
அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே.. அதற்காகவேனும்... 
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே 
செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... 
அதற்காக வேணும்... 
காதலித்துப் பார்!   *** வைரமுத்து-