காதல் எழுதிய கவிதைகள்
(அ)
கவிதை எழுதிய காதல்
*
நீ இயல்பாகத்தான் பேசுகிறாய்.
எனக்குத்தான் உன்னிடம் பேசுவதே
இயல்பாகி விட்டது.
இயல்பாகி விட்டது.
*
எல்லா மொழியிலும்
எனக்கு காதலைக் குறிக்கும் ஒரு சொல்
எனக்கு காதலைக் குறிக்கும் ஒரு சொல்
உனது பெயர்.
*
உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும்
நீ தன்னை ஒரு முறை சுற்றி வந்ததாய் பெருமைப்படுகிறது
சூரியன்.
*
உனது அக்கறையை அனுபவிக்கவேனும்
இன்னும் சிலநாள் நீடிக்கட்டும்
எனது காய்ச்சல்.
*
நீ பார்த்து பார்த்து
உன்னிலும் அழகாகிறது
உன் வீட்டுக் கண்ணாடி.
*
‘பார்க்காமலே காதலிக்கிறப் பழக்கம்
மீன்களுக்குண்டு’ என்கிறேன்.
‘உண்மையாகவா?’ என கண்களை
உருட்டுகிறாய்.
சந்திக்காத காதல் மீன்கள் இரண்டும்
ஒன்றுபோல உருள்கின்றன.
*
குறைக்கிற ரகசியம் கற்றிருக்கிறது
உன் முத்தம்.
எத்தனை கவிதையெழுதியென்ன?
*
இசையென வழிகிறது.
வீணை நரம்புகளும் உனது விரல் நரம்புகளும்
காதலில் பதிக்கிற முத்தங்கள்.
*
பிடித்திருக்கிறதென நீ சொல்லப்போகிற ஒன்றிரண்டைத் தவிர
மற்றவை எல்லாம் தற்கொலை செய்துகொள்ளப்போகின்றன!
No comments:
Post a Comment